இது என்ன புத்தகம்?
தமிழ் சைவ இலக்கியத்தின் பொக்கிஷமாக விளங்குவது தேவாரம். அந்த தேவாரத்தில் மனித உணர்வுகள், இறைநம்பிக்கை, உரிமை, பாசம் ஆகியவை மிக இயல்பாக வெளிப்படுவது சுந்தரர் அவர்களின் பதிகங்களில். சுந்தரரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கிய திருப்பம் – அவர் பார்வையை இழந்து, பின்னர் இறைவனின் அருளால் மீண்டும் பார்வை பெற்ற நிகழ்வு – பக்தியில் மிகவும் உருக்கமானதாக கருதப்படுகிறது.
சுந்தரர், சிவபெருமானுடன் “நண்பனாக” உரிமையுடன் பேசும் பக்தர். ஒருசமயம் அந்த உரிமையில் ஊர் எல்லையை மீறி பயணிக்க, இறைவன் அவரின் பார்வையைப் பறித்தார். இந்த பார்வை இழப்பு உடல் தண்டனை அல்ல; அது உள்ளார்ந்த மாற்றத்துக்கான அழைப்பு.
பார்வையிழந்த நிலையில் சுந்தரர் பரமேஸ்வரனை பாடி அழுதார், தொழுதார். அந்த அழுகை, சரணாகதியின் வெளிப்பாடு தேவாரத்தின் ஒரு பகுதியாக நமக்கு கிடைத்திருக்கிறது.
மூன்று பதிகங்கள் பாடி – ஊன்றுகோல், வலது கண், இடது கண் கிடைக்கப்பெற்றார்.
சுந்தரர் பாடிய மூன்று முக்கிய பதிகங்கள் அவருக்குப் பார்வை திரும்பக் கிடைக்கக் காரணமாகக் கருதப்படுகின்றன:
இவை மந்திரங்கள் அல்ல, உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடுகள்
பரமேஸ்வரன் தண்டிப்பவன் அல்ல, திருத்துபவன் என்பதை உணர்த்துகின்றன
உடல் நோய்க்கும் மேலாக, மன அகந்தைக்கும் மருந்து என தேவாரம் விளங்குகிறது
சுந்தரரின் வாழ்க்கை, பக்தி என்பது பயமல்ல; அது உறவு என்பதைக் காட்டுகிறது
இந்த மூன்று பதிகங்கள் இன்றைய வாழ்விற்கு மிக மிக அவசியமானவை. கண் பார்வையில் கோளாறு, பிரச்சனை உள்ளவர்கள், முழு உள்ளத்துடன் இதை படித்தால், பார்வை சீர் ஆகும்.
இந்த புத்தகத்தின் தேவை:
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், முதல் முறையாக சுந்தரரின் பதிகங்களுக்கு அருள் உரை வழங்கியுள்ளார். இதில் நூற்றுக் கணக்கான வருடங்களாக நாம் படித்து வரும் பாடல் வரிகளுக்கும், ஒரு யுக புருஷரைப் போன்று புத்தம் புது விதமாக இந்த வரிகளை புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ள பொருளை விளக்கியுள்ளார். இப்படிப்பட்ட ஆழ்ந்த கருத்துடன் இதை படித்து புரிந்து கொண்டால் பக்தி என்பது மெருகேறி, இந்த பதிகங்களை படிப்பதினால் வரும் பலன்களும் மேலும் உன்னதமாகி பக்தர்களுக்கு சிறப்பைத் தரும். இதை அச்சிட்டு வெளியிட தங்களால் முடிந்த நன்கொடை அளித்து பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.










Reviews
There are no reviews yet.